கோவையில் பெண்ணிடம் கந்துவட்டி வசூல் - தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கைது..!

கடன் கொடுத்து விட்டு, பின்னர் கந்துவட்டி மற்றும் தொல்லை கொடுத்து வந்த கோவை ராமநாதபுரம் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பழனியப்பன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று காலகட்டத்தில் தொழில் முடக்கம் காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி வசூல் செய்வதாக, கோவையை சேர்ந்த தம்பதி அளித்த புகாரின் பேரில், அந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்து, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் - வினுதா தம்பதி. சுயதொழில் செய்து வந்த நிலையில், கொரோனா தொற்று காலகட்டத்தில் தொழில் முடக்கம் காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (52) என்ற தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக, தனது கணவர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் சில ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளனர். மேலும், இவர் மூலம் தனக்கு தெரிந்தவர்களுக்கும் பழனியப்பனிடம் கடன் பெற்றும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நான் வாங்கிய ரூ.36.60 லட்சம் கடனுக்கு, ரூ.7.70 லட்சம் வட்டியாக செலுத்திய பின்னும், தான் கொடுத்த ஆவணங்கள், காசோலைகள் போன்ற ஆவணங்களை திருப்பி கேட்ட போது, கொடுக்க மறுத்த பழனியப்பன் கூடுதல் கந்து வட்டி கேட்டதோடு, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

எனவே, கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் பழனியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மாநகர் போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கந்துவட்டி வசூல் செய்யப்பட்டது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, பழனியப்பன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில், 766 காசோலைகள், 163 முத்திரை.தாள்கள், நோட்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பழனியப்பனை தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடன் கொடுத்து விட்டு, பின்னர் கந்துவட்டி மற்றும் மிரட்டல் விடுத்து வந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசாருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...