தமிழ்நாடு நாயுடு பேரவை விரைவில் அரசியல் கட்சியாக உதயமாக உள்ளது - கோவையில் மாநில தலைவர் தகவல்

தெலுங்குபாளையம் பகுதியில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் பேசிய மாநில தலைவர் குணசேகர் தமிழ்நாடு நாயுடு பேரவை 2 மாதத்தில் கட்சியை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: தெலுங்குபாளையம் பகுதியில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகளுடனான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.



மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில தலைவர் முனைவர். குணசேகர் கூறும் போது:



தற்போது தமிழக அரசால் தாங்கள் பழிவாங்கப்பட்டதுடன், இடஒதுக்கீடு என்ற பெயரில் அரசால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.. மேலும், நீண்ட நாள் கோரிக்கையான ஒவ்வொரு பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகத்தினரையும் சமமாக பார்க்க வேண்டும்.

இன்னும் 2 மாதங்களில் அரசியல் கட்சி துவங்க உள்ளோம்.இதற்காக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்பித்துள்ளளோம். விரைவில் தமிழ்நாடு நாயுடு பேரவை அரசியல் கட்சியாக உருவெடுக்கும். இதுவரைக்கும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து, பேசிய பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசும் போது: சமூக நீதி என்பது ஓட்டு வங்கிக்காக மட்டுமே பேசப்படுகிறது. அனைவருக்கும் சமமான வழங்கும் வாய்ப்பு தான் சமூக நீதி, ஆனால், இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நசுக்கப்படுகிறார்கள்.

இதே நிலை தொடர்ந்தால், அரசு வேலை வாய்ப்பு, உயர் கல்வி, மத்திய அரசின் வேலைகளில் கூட பிற்படுத்தப்பட்டோர் இருக்க மாட்டார்கள், எனத் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...