2024-தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வதாகவும், கூட்டணியை மேலும் வலுப்படுத்த 25-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு கடந்த நான்கு தினங்களாக திருப்பூரில் நடைபெற்று நேற்றைய தினம் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது. இந்த மாநில மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மூன்றாவது முறையாக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.
மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்பு இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டம் ஆகியவை மிக எழுச்சியோடும் முழு கட்டுப்பாட்டோடு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும் 25 வது மாநில மாநாட்டில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உருவாக்க பட்டிருப்பதாகவும், இதில் ஏராளமான புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர வேண்டும் எனவும் கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல் பிரிவே ஆட்சி செய்கிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றனர் எனவும், அக்னிபாத் திட்டம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் ஆக மாற்றும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. சுதந்திரத்தை பாதுகாப்போம், சோசலிசத்தை இங்கமைப்போம், பாசிசத்தை தோற்கடிப்போம் என்ற முழக்கத்தோடு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும், மின்சார சட்ட திருத்த மசோதா கண்டனத்துக்குரியது, மின்சாரத்தை தனியார் மயமாக்கும் முடிவு, இதனால் தொழில்கள் மட்டுமல்ல சாமானிய மக்களும் பாதிக்கப்படுவர்.
இதனை கண்டித்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், பாஜகவை விட்டு மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கி விட்டனர். பீகார் மாநில அரசியல் நிலவரம் அதற்கு ஒரு சாட்சி என பேட்டியளித்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்பு இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டம் ஆகியவை மிக எழுச்சியோடும் முழு கட்டுப்பாட்டோடு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும் 25 வது மாநில மாநாட்டில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உருவாக்க பட்டிருப்பதாகவும், இதில் ஏராளமான புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர வேண்டும் எனவும் கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மத்தியில் ஆர்.எஸ்.எஸ் சின் அரசியல் பிரிவே ஆட்சி செய்கிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றனர் எனவும், அக்னிபாத் திட்டம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் ஆக மாற்றும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. சுதந்திரத்தை பாதுகாப்போம், சோசலிசத்தை இங்கமைப்போம், பாசிசத்தை தோற்கடிப்போம் என்ற முழக்கத்தோடு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும், மின்சார சட்ட திருத்த மசோதா கண்டனத்துக்குரியது, மின்சாரத்தை தனியார் மயமாக்கும் முடிவு, இதனால் தொழில்கள் மட்டுமல்ல சாமானிய மக்களும் பாதிக்கப்படுவர்.
இதனை கண்டித்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், பாஜகவை விட்டு மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கி விட்டனர். பீகார் மாநில அரசியல் நிலவரம் அதற்கு ஒரு சாட்சி என பேட்டியளித்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.