கோவை பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா..!

12-ஆம் தேதி வரவிருக்கும் உலக யானைகள் தினம் மற்றும் நேற்று கொண்டாடப்பட்ட உலக பழங்குடியினர் தினம் மற்றும் உலக செஸ் விளையாட்டு போட்டி நிறைவு நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, டாப்சிலிப்பில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட வன கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் துணி போற்றப்பட்டு செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அங்கு பராமரிக்கப்படும் யானைகள் பங்கேற்றன.



ஒன்றன்பின் ஒன்றாக யானைகள் கருப்பு, வெள்ளை நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சீத்தல் ஓய்வு விடுதியிலிருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை அணிவகுப்பில் பங்கேற்றன.



பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சதுரங்கப்பலகையை 5 முறை சுற்றி வந்தது.



வித்தியாசமான செஸ் அணிவகுப்பைப் பார்த்த சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியில் கைதட்டி யானைகளை உற்சாகப்படுத்தினர். மேலும், செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.



முன்னதாக, நிகழ்ச்சியைத் துணை வன இயக்குநர், மா.கோ.கணேசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி வனப் பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, வெங்கடேஷ் மற்றும் வனவர், வனக் காப்பாளர்கள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், யானை பாகன்கள் மாவூத், கவாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...