கோவை கே.ஜி சாவடியில், 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தி கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்கிறார்.
கோவை: கோவையில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தேசபக்தி கோட்டையை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்கிறார்.
ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-
ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் கோவை லயன்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தேசபக்தி கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் 68வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 126 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை ரேஸ் கோர்ஷில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதே போல் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.
அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு 70 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 'என் தேசம் என் சுவாசம்' என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் மற்றும் 67 தங்க காசுகள் பரிசாக கொடுக்கப்பட்டது.
75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி 150 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை நிரந்தரமாக பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பாலக்காடு மெயின் ரோடு சாவடியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் மூன்று கோடி செலவில் பிரம்மாண்டமாக தேச பக்தி கோட்டை உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 14ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
இந்த தேசபக்தி கோட்டையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார். கமாண்டிங் ஆபீசர் 110. டெரிடோரியல் ஆர்மி (சென்னை) கோலோனல் தினேஷ் சிங் தன்வர், மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.
ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:-
ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் கோவை லயன்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தேசபக்தி கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் 68வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 126 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை ரேஸ் கோர்ஷில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதே போல் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.
அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு 70 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 'என் தேசம் என் சுவாசம்' என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் மற்றும் 67 தங்க காசுகள் பரிசாக கொடுக்கப்பட்டது.
75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி 150 சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்தை நிரந்தரமாக பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கு பாலக்காடு மெயின் ரோடு சாவடியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் மூன்று கோடி செலவில் பிரம்மாண்டமாக தேச பக்தி கோட்டை உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 14ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
இந்த தேசபக்தி கோட்டையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார். கமாண்டிங் ஆபீசர் 110. டெரிடோரியல் ஆர்மி (சென்னை) கோலோனல் தினேஷ் சிங் தன்வர், மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.