கோவையில் 'சொகுசு காரில் வந்து கஞ்சா விற்பனை' இருவர் கைது; 21-கிலோ கஞ்சா, ரூ.2.40-லட்சம் மற்றும் BMW கார் பறிமுதல்..!

விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.



கோவை: கோவை மாநகர் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மை காலமாக ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் உதவி ஆய்வாளர் செங்கோல்நாதன் தலைமையிலான போலீசார் சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர் மார்க்கெட் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது மார்க்கெட் அருகே BMW சொகுசு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்து கடந்து சென்று மீண்டும் அதே பகுதிக்கு போலீசார் வந்த போது ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அருகே சென்று காரில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனையிட்ட போது அதில் பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் வீர சிவக்குமார் 55), மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்திக் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஆந்திரா மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சொகுசு காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



மேலும் மொத்த விற்பனைக்காகக் கோவை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வீர சிவக்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.2.40 லட்சம் பணம் மற்றும் BMW சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...