போஸ்டர்‌ கலாச்சாரத்தை ஒழிக்க பாலங்களின்‌ தூண்களில் ‌செங்குத்து தோட்டம்‌ அமைக்க வேண்டும்‌-பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி..!

போஸ்டர்‌ கலாச்சாரத்தை ஒழிக்க பால தூண்களில்‌ செங்குத்து தோட்டத்தை அமைக்க வேண்டும்‌. இது நமது கோவைக்கு மேலும்‌ அழகை சேர்க்கும்‌. காற்றின்‌ தரத்தை மேம்படுத்தும்‌ என பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.


கோவை: போஸ்டர்‌ கலாச்சாரத்தை ஒழிக்க பாலங்களின்‌ தூண்களில் ‌செங்குத்து தோட்டம்‌ அமைக்க வேண்டும்‌ என கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



நமது கோவையில்‌ எங்கு பார்த்தாலும்‌ அரசியல்‌ கட்சியின்‌ விளம்பரங்களும்‌, போஸ்டர்களும்‌ தான்‌ இருக்கிறது. அசிங்கமாகவும்‌ அசுத்தமாகவும்‌ இருக்கிறது. ஒரு கட்சி கொண்டுவரும்‌ திட்டங்கள்‌ தான்‌ அந்த கட்சியை விளம்பரப்படுத்த வேண்டும்‌. ஆனால்‌ இங்கு போஸ்டர்களும்‌ பேனர்களும்‌ ஒரு கட்சியை விளம்பரப்‌ படுத்திக்‌ கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும்‌ வேடிக்கை பார்த்து வருகின்றனர்‌.



கோவையில்‌ பாமக மட்டுமே போஸ்டர்கள்‌ ஒட்ட மாட்டோம்‌ என்று சபதம்‌ எடுத்துள்ளனர்‌. நாங்கள்‌ சொல்லும்‌ திட்டங்களை வைத்து மட்டுமே அரசியல்‌ செய்கிறோம்‌. இன்று இல்லாவிட்டாலும்‌ ஒரு நாள்‌ கண்டிப்பாக பேசப்படும்‌. அதுவே எங்கள்‌ நம்பிக்கை.

போஸ்டர்‌ கலாச்சாரத்தை ஒழிக்க பால தூண்களில்‌ செங்குத்து தோட்டத்தை அமைக்க வேண்டும்‌. இது நமது கோவைக்கு மேலும்‌ அழகை சேர்க்கும்‌. காற்றின்‌ தரத்தை மேம்படுத்தும்‌. செங்குத்து தோட்டத்தில்‌ உள்ள தாவரங்கள்‌ காற்றிலிருந்து துகள்களை வடிகட்டி கார்பன்‌ டை ஆக்சைடை ஆக்சிஜன்‌ ஆக மாற்றும்‌.

இந்தத்‌ திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்‌ என்று கூறியுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...