கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு: நீர்பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடை மழையால் நீர்வரத்து அதிகரிப்பு..!

சிறுவாணியில் அடை மழை பொழிவதால், அணையின் நீர் மட்டம் அதிகரித்து முழு கொள்ளளவான 45-அடியை எட்டினால் இந்த பருவத்தில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும் என்பதால், அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருக்கின்றன.


கோவை: சிறுவாணி அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து, நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடை மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுவாணி அணை அமைந்திருக்கின்றது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருந்தாலும் அதன் பலன் என்னவோ கோயமுத்தூருக்கே. இந்த நிலையில் அணையின் பராமரிப்பு செலவுகளை தமிழ்நாடு அரசாங்கம் செய்கின்றது.

சிறுவாணி அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவான 45-அடி நீரை முன்பு எட்டியிருந்த நிலையில் கேரள அதிகாரிகள் தமிழ்நாடு அதிகாரிகளைக் கேட்காமல் அதிக அளவு தண்ணீர் திறந்து அத்துமீறலில் ஈடுபட்டிருந்தனர்.

பொதுமக்களிடையே கண்டனம் எழுந்த நிலையில் தண்ணீர் திறப்பு தடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடை மழையால் நீர்வரத்து அதிகரித்திருக்கின்றன. முந்தைய வாரம் 37 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியிருக்கின்றன.



சிறுவாணி பகுதியில் அடை மழை பொழிவதன் அடிப்படையில் அணை நீர்மட்டம் அதிகரித்து முழு கொள்ளளவை 45-அடி எட்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.அவ்வாறு முழு கொள்ளளவை எட்டினால் இந்த பருவத்தில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும். இந்த நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது.



இந்த நீரானது நொய்யல் ஆற்றிலும் பவானி ஆற்றிலும் செல்கின்றன. இதனால், நொய்யல் ஆற்றின் தடுப்பணைகள், குளங்களுக்கும் பவானி ஆற்றின் பில்லூர் அணைக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விவசாய பாசனம் குடிநீர் தேவைக்கான பஞ்சமிருக்காதென தெரிவித்திருக்கின்றனர்.

முன்னதாக சிறுவாணி அணையில் இருந்து தமிழ்நாட்டு அதிகாரிகளைக் கலந்து ஆலோசிக்காமல் தண்ணீர் திறந்திருந்தனர். சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்திருந்ததனால் அணை நீர்மட்டம் சரிந்திருந்தன.

இந்த இந்த நிலையில், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடை மழையால் நீர்வரத்து அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவாணி அணை உபரி நீர் நொய்யல், பவானி ஆறுகளுக்கு செல்வதனால் கோவை ஏரி குளம் பில்லூர் அணைக்கு தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...