பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் திடீரென்று மின்மாற்றி (Transformer) வெடித்த சம்பவத்தில், துரிதமாக மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இரு தினங்களுக்கு முன், கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கிரியம்மன் கோவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மின்சார மின்மாற்றி காலை 9:30 மணி அளவில் திடீரென்று வெடித்து செயல் இழந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நுகர்வோர் சேவை மையத்திற்கு திமுக, தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முஹம்மது அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், உடனடியாக கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று முஹம்மது அன்சாரி தெரிவித்தார்.

மின்மாற்றி பழுது நீக்கபட்ட போது, 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஈ.ரா. தனபால், எலக்ட்ரீசியன் வேலு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.
இரு தினங்களுக்கு முன், கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கிரியம்மன் கோவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மின்சார மின்மாற்றி காலை 9:30 மணி அளவில் திடீரென்று வெடித்து செயல் இழந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நுகர்வோர் சேவை மையத்திற்கு திமுக, தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முஹம்மது அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், உடனடியாக கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று முஹம்மது அன்சாரி தெரிவித்தார்.
மின்மாற்றி பழுது நீக்கபட்ட போது, 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஈ.ரா. தனபால், எலக்ட்ரீசியன் வேலு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.