கோவை 27-வது வார்டில் திடீரென்று வெடித்த மின்மாற்றி; துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளால் அசம்பாவிதம் தவிர்ப்பு...!

பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் திடீரென்று மின்மாற்றி (Transformer) வெடித்த சம்பவத்தில், துரிதமாக மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இரு தினங்களுக்கு முன், கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கிரியம்மன் கோவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மின்சார மின்மாற்றி காலை 9:30 மணி அளவில் திடீரென்று வெடித்து செயல் இழந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நுகர்வோர் சேவை மையத்திற்கு திமுக, தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முஹம்மது அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.



புகாரின் அடிப்படையில், உடனடியாக கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து பொறியாளர் மற்றும் ஊழியர்கள் வந்து மின்மாற்றியை மாற்றி, புதிய மின்மாற்றி பொருத்தி துரிதமாகச் செயல்பட்டதால், பெரும் ஆபத்து தடுக்கப்பட்டது என்று முஹம்மது அன்சாரி தெரிவித்தார்.



மின்மாற்றி பழுது நீக்கபட்ட போது, 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஈ.ரா. தனபால், எலக்ட்ரீசியன் வேலு ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...