சவுரிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த தனிநபரிடம் இருந்து, இந்து சமய அறநிலையத் துறையினர் நிலத்தை மீட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையம் அருகே தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில், இந்த கோவிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 27.78 சென்ட் நிலத்தை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் "இந்த நிலம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது" என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில், இந்த கோவிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 27.78 சென்ட் நிலத்தை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் "இந்த நிலம் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது" என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.