மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா என்ற மாணவி 10 நிமிடங்களில், ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை (Rhymes) பாடி, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில், (India Book of Records) இடம் பிடித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், சாலினி தம்பதியினரின் ஐந்து வயது மகள் இனியா. இவர், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி, இனியா அசத்தியுள்ளார்.
இவரது ஞாபகத் திறனை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தினர், சிறுமியின் சாதனையை, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.
10 நிமிடங்களில் 50 பாடல்களை பாடி அசத்தியுள்ள மாநகராட்சி பள்ளி மாணவி இனியாவுக்கு, கோவை மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.