கோவை தடாகம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கூடத்தை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கூடம் அருகே பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் தடாகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



தடாகம் அடுத்த கே.என்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் திருமண மண்டபம், சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கூடமாக மாற்றப்பட்டு, திறக்கப்பட்டது. FL2 சான்று பெற்று செயல்பட்டு வந்த இந்த மதுபானக் கூடத்தினால், அப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி வந்த அப்பகுதி மக்கள், அந்த மது கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக, மதுபானக் கூடம் அருகே ஒரு பள்ளி செயல்பட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் தெரிவித்தனர்.



இந்த நிலையில், அந்த மதுபான கூடத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு வந்த, தடாகம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.



பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...