பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என கூறி கொட்டும் மழையில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து கொட்டும் மழையில்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லைஎன கூறி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தென்னமநல்லூருக்கு வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறினர்.
இதனால் பள்ளி பேருந்துகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் பாதிப்படைந்தனர். இதனிடையே தொண்டாமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடந்த வருகின்றனர்.