கோவையிலிருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு ஆகஸ்ட் 21 அன்று கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.
கோவை: கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு ஆகஸ்ட் 21 அன்று கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் 2022-க்கான “நாஞ்சில்நாடன் விருது” வழங்கப்படவுள்ளது.
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017-உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். கௌரவ ஆலோசகர்களாக நாஞ்சில் நாடன், வ.ஸ்ரீநிவாசன், ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு வழங்கப்படவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படும். விழா விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்விழாவில் "ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லிய கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.
விருது பற்றி சிறு அறிமுகம்..!
சிறுவாணி வாசகர் மையம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசு தொகை ரூபாய் 50,000, கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது.
முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்..!
ஓவியர் ஜீவா (2018), ஆய்வாளரும், உ.வே.சா படைப்புகள் மற்றும் பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணன் (2019), பத்திரிகையாளர், எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020), மணல்வீடு ஹரிகிருஷ்ணன் (2021).
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017-உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். கௌரவ ஆலோசகர்களாக நாஞ்சில் நாடன், வ.ஸ்ரீநிவாசன், ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜுக்கு வழங்கப்படவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படும். விழா விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்விழாவில் "ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லிய கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.
விருது பற்றி சிறு அறிமுகம்..!
சிறுவாணி வாசகர் மையம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது. கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசு தொகை ரூபாய் 50,000, கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது.
முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்..!
ஓவியர் ஜீவா (2018), ஆய்வாளரும், உ.வே.சா படைப்புகள் மற்றும் பல நூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப.சரவணன் (2019), பத்திரிகையாளர், எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020), மணல்வீடு ஹரிகிருஷ்ணன் (2021).