நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி.ராஜா பெற்றுக் கொண்டார்.
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

இன்று மாலை சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சிறப்பு உரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சிறப்பு உரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.