நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடி வருகிறது.
கோவை: தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுவதால், பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது.
நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்கள் யாரும் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.