கோவை சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் வெள்ளம் - பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை..!

நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடி வருகிறது.



கோவை: தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுவதால், பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.



இந்நிலையில், நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை - பாலக்காடு சாலை, மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது.



நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்கள் யாரும் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை அருகே செல்ல வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...