மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு பின்னர், பொதுமக்களிடம் தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி தெலுங்குபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.76 க்குட்பட்ட தெலுங்குபாளையம், பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் சீராக உள்ளதா என்பது குறித்தும், அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.76 க்குட்பட்ட தெலுங்குபாளையம், பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர் அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் சீராக உள்ளதா என்பது குறித்தும், அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.