Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம்.
கோவை: கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான 5 நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவையில் செயல்பட்டு வந்த Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் வந்துள்ளது.
இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து கோடி கணக்கில் முதலீட்டை பெற்று அதனை திருப்பி தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.