Just in: கோவையில் மோசடியில் ஈடுபட்ட 5 நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க போலீசார் அறிவுறுத்தல்..!

Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம்.



கோவை: கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான 5 நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவையில் செயல்பட்டு வந்த Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் வந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து கோடி கணக்கில் முதலீட்டை பெற்று அதனை திருப்பி தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...