முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
2022-23 கல்வியாண்டு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கைக்காகக் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 23-பாடப்பிரிவுகளில் 1443-இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 25-ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

முதல் நாள் கலந்தாய்வு இன்று துவங்கியது.

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வுக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கூறும் போது, போதுமான இருக்கை வசதிகள் செய்யவில்லை என தெரிவித்தனர்.

இதனால் சிரமமாக இருப்பதாக கூறிய அவர்கள் கலந்தாய்வில் இடம் பிடித்து படிப்பதோடு, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
2022-23 கல்வியாண்டு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கைக்காகக் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 23-பாடப்பிரிவுகளில் 1443-இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 25-ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் நாள் கலந்தாய்வு இன்று துவங்கியது.
முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வுக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கூறும் போது, போதுமான இருக்கை வசதிகள் செய்யவில்லை என தெரிவித்தனர்.
இதனால் சிரமமாக இருப்பதாக கூறிய அவர்கள் கலந்தாய்வில் இடம் பிடித்து படிப்பதோடு, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.