போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கோவை: போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது குறித்து மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சிகளில் உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பான எண்ணையும் அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.

இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சிகளில் உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பான எண்ணையும் அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.
இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.