'போதை பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம்' அமைப்பது குறித்து கோவை மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.


கோவை: போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது குறித்து மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சிகளில் உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பான எண்ணையும் அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...