கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 ஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என மனுவில் தெரிவித்தனர்.
கோவை: மாடு அறுவை கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாட்டு இறைச்சி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு மாடு அறுவை மையங்களில் மாட்டிற்கு தலா ரூ.10 மட்டும் வசூல் செய்யப்பட்ட நிலையில், புதிதாக ஒப்பந்தம் விடப்பட்ட பின் மாட்டிற்கு தலா ரூ.250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கட்டணத்தை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது:-
கோவை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 300 மாட்டு இறைச்சி விற்பனை வியாபாரிகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 மஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என தெரிவித்தனர். கட்டணத்தை குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.