மாடு அறுவை கட்டணத்தை குறைக்க கோரி - கோவை மாட்டு இறைச்சி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 ஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என மனுவில் தெரிவித்தனர்.



கோவை: மாடு அறுவை கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாட்டு இறைச்சி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு மாடு அறுவை மையங்களில் மாட்டிற்கு தலா ரூ.10 மட்டும் வசூல் செய்யப்பட்ட நிலையில், புதிதாக ஒப்பந்தம் விடப்பட்ட பின் மாட்டிற்கு தலா ரூ.250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து மாட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கட்டணத்தை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் கட்டணத்தை குறைக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து வியாபாரிகள் கூறும் போது:-

கோவை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 300 மாட்டு இறைச்சி விற்பனை வியாபாரிகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.10 மஆக இருந்த கட்டணம் ஒரே அடியாக ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணத்தை குறைந்தது 50 - 100 ஆக உயர்த்த வேண்டும், ரூ.250 மிக அதிக உயர்வு என தெரிவித்தனர். கட்டணத்தை குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...