இறந்தவர் யார் என்பது குறித்தும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூட்டியிருந்த கடையின் முன்பு படுத்திருந்த ஆதரவற்ற நபரின் தலையில் கல்லை போட்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை வாசலில் தூங்கிய ஆதரவற்ற நபர் தலையில்கல்லை போட்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடை முன்பாக ரத்தத்துடன் ஆதரவற்ற நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் யார் என்பது குறித்தும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும்போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.