திருப்பூர் நஞ்சராயன் குளம் அருகே நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

வழக்கு நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த மரம் நடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் நஞ்சராயன் குளம் அருகே நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் நஞ்சராயன் குளம் 440 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிச் செல்ல கூடிய நிலையில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நஞ்சராயன் குளக்கரையில் அமைந்துள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியின்போது முறைகேடாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அரசு விற்பனை செய்துள்ளது.



தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முறைகேடாக விற்பனை செய்த நிலத்தை அரசே மீட்டு பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நஞ்சராயன் பாதுகாப்பு குழு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்ற நிலையில் இன்று தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மரம் நடும் விழா அறிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் மரம் நடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கூலிபாளையம் நஞ்சராயன் குளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...