வழக்கு நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த மரம் நடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் நஞ்சராயன் குளம் அருகே நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் நஞ்சராயன் குளம் 440 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிச் செல்ல கூடிய நிலையில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நஞ்சராயன் குளக்கரையில் அமைந்துள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியின்போது முறைகேடாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அரசு விற்பனை செய்துள்ளது.

தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முறைகேடாக விற்பனை செய்த நிலத்தை அரசே மீட்டு பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நஞ்சராயன் பாதுகாப்பு குழு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்ற நிலையில் இன்று தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மரம் நடும் விழா அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் மரம் நடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கூலிபாளையம் நஞ்சராயன் குளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் நஞ்சராயன் குளம் 440 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிச் செல்ல கூடிய நிலையில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நஞ்சராயன் குளக்கரையில் அமைந்துள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியின்போது முறைகேடாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அரசு விற்பனை செய்துள்ளது.
தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முறைகேடாக விற்பனை செய்த நிலத்தை அரசே மீட்டு பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நஞ்சராயன் பாதுகாப்பு குழு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கின்ற நிலையில் இன்று தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மரம் நடும் விழா அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் மரம் நடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கூலிபாளையம் நஞ்சராயன் குளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.