திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணி விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

திருப்பூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் இந்த பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சரிவர மூடப்படாமல் இருந்ததின் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் சார்பில் புகார்கள் சென்றதாக தெரிகிறது.



அதன்பேரில் இன்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதிகளில் நடைபெற்று வருகிற ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சம்மந்தப்பட்ட பணிகள் முடிந்தும், அப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக மூடப்படாமல் இருந்ததை கண்டு, மேயர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, அதற்கான குழிகளை மூட வேண்டும் என மேயர் தினேஷ்குமார் கண்டித்தார்.

அதே போல் குழிகள் உள்ள இடங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பேரி கார்டு அமைக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...