திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணி விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

திருப்பூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் இந்த பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சரிவர மூடப்படாமல் இருந்ததின் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் சார்பில் புகார்கள் சென்றதாக தெரிகிறது.



அதன்பேரில் இன்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதிகளில் நடைபெற்று வருகிற ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சம்மந்தப்பட்ட பணிகள் முடிந்தும், அப்பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக மூடப்படாமல் இருந்ததை கண்டு, மேயர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சியில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து, அதற்கான குழிகளை மூட வேண்டும் என மேயர் தினேஷ்குமார் கண்டித்தார்.

அதே போல் குழிகள் உள்ள இடங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பேரி கார்டு அமைக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...