கோவையில் இரண்டு யானைகள் மோதல் – 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு….!

கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டதில், ஒரு யானை தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. நாளை உடற்கூர் ஆய்வு நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைகட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டு இருப்பதாக, அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கோவை வனச்சரக வன ஊழியர்கள் மதியம் 2 மணியளவில் சென்று பார்த்தபோது, சண்டையில் ஏற்பட்ட காயங்களால் ஒரு ஆண் யானை காப்பு காட்டுக்குள்ளே எல்லையோரத்தில் தந்தத்தால் குத்திய காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சண்டையிட்ட மற்றொரு யானையின் உடல் நலம் அல்லது அது எங்கு உள்ளது..? என்பது குறித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும் என்றும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...