குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை 30 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுத்துறை இன்சூரன்ஸில் ஓய்வுதியம் பெறுவோர் சங்கத்தினர் யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொதுத்துறை, பொது இன்சூரன்ஸ் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர் சங்க உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடம் நேஷனல், யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நியூ இந்தியா மற்றும் எல்ஐசி நிறுவனங்களின் நிர்வாக குழு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே பரிந்துரைத்த போதும் அதனை அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினர், தொடர்ந்து பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் கோவை மண்டல பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என போராட்ட முடிவில் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து ஏற்கனவே மத்திய அரசிடம் நேஷனல், யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நியூ இந்தியா மற்றும் எல்ஐசி நிறுவனங்களின் நிர்வாக குழு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே பரிந்துரைத்த போதும் அதனை அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினர், தொடர்ந்து பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் கோவை மண்டல பொறுப்பாளர் வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என போராட்ட முடிவில் தெரிவித்தனர்.