திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பச்சாபாளையத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் நவீன மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தையடுத்த பச்சாபாளையம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி நவீன மின் மயானம் அமைப்பதற்கு பல்லடம் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பச்சாபாளையம் பகுதியை ஒட்டியுள்ள ஓடையை, கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அங்கு துர்நாற்றமானது வீசி வருகிறது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நவீன மின் மயானம் அமைத்தால் அங்கு பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் பல்லடம் நகராட்சியில் புகார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நவீன மின் மயானம் பச்சாபாளையம் குடியிருப்பு பகுதியில் அமைவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி நவீன மின் மயானம் அமைப்பதற்கு பல்லடம் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பச்சாபாளையம் பகுதியை ஒட்டியுள்ள ஓடையை, கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அங்கு துர்நாற்றமானது வீசி வருகிறது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நவீன மின் மயானம் அமைத்தால் அங்கு பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் பல்லடம் நகராட்சியில் புகார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நவீன மின் மயானம் பச்சாபாளையம் குடியிருப்பு பகுதியில் அமைவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.