குடியிருப்பு பகுதியில் நவீன மின் மயானம் எதிர்த்து திருப்பூர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பச்சாபாளையத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் நவீன மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தையடுத்த பச்சாபாளையம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி நவீன மின் மயானம் அமைப்பதற்கு பல்லடம் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பச்சாபாளையம் பகுதியை ஒட்டியுள்ள ஓடையை, கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அங்கு துர்நாற்றமானது வீசி வருகிறது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நவீன மின் மயானம் அமைத்தால் அங்கு பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் பல்லடம் நகராட்சியில் புகார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.



இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நவீன மின் மயானம் பச்சாபாளையம் குடியிருப்பு பகுதியில் அமைவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...