மழைக்காலம் என்பதால் பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்த பிறகு மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை..!

சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-

கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், பள்ளி வளாகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் தேங்கி இருக்கும் நீரின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் தடுக்க வேண்டும்.

தேவையில்லாத மரங்கள், புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். வகுப்பறைகளின் மேற்கூரைகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பாக வகுப்பறைகளை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...