கோவை சிறையில் கள்ள நோட்டு வழக்கு குற்றவாளி மரணத்தால் பரபரப்பு

கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நஞ்சை இடையாரை சேர்ந்த சுப்பையன் (70) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.


கோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நஞ்சை இடையாரை சேர்ந்தவர் சுப்பையன் (70). இவர் 2006-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் சிபிசிஐடி போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டவர்.

அவர் மீதான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர், அதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறை அதிகாரி சிவராசன் புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். இதனால் சிறைகைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...