கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நஞ்சை இடையாரை சேர்ந்த சுப்பையன் (70) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நஞ்சை இடையாரை சேர்ந்தவர் சுப்பையன் (70). இவர் 2006-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் சிபிசிஐடி போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டவர்.
அவர் மீதான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர், அதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறை அதிகாரி சிவராசன் புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். இதனால் சிறைகைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மீதான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர், அதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறை அதிகாரி சிவராசன் புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார். இதனால் சிறைகைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.