கோவை புதூர் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்த கனகராஜ் குடிபோதையில் மனைவியை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை: கோவை புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் 31, கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி 25, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினி குளத்துப்பாளையத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.
இந்நிலையில் கடந்த 2019 மே 31- ந்தேதி அன்று அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வாட்டர் பிளான்ட்டில் நந்தினி வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது அங்கு குடிபோதையில் சென்ற கனகராஜ் மனைவி நந்தினியும் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து கனகராஜை கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிசா ஆஜர் ஆகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2019 மே 31- ந்தேதி அன்று அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வாட்டர் பிளான்ட்டில் நந்தினி வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது அங்கு குடிபோதையில் சென்ற கனகராஜ் மனைவி நந்தினியும் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து கனகராஜை கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிசா ஆஜர் ஆகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.