மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவை புதூர் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்த கனகராஜ் குடிபோதையில் மனைவியை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: கோவை புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் 31, கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி 25, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினி குளத்துப்பாளையத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.

இந்நிலையில் கடந்த 2019 மே 31- ந்தேதி அன்று அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள வாட்டர் பிளான்ட்டில் நந்தினி வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது அங்கு குடிபோதையில் சென்ற கனகராஜ் மனைவி நந்தினியும் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து கனகராஜை கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிசா ஆஜர் ஆகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...