கோவையில் பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம்..!

இடத் தகராறு ஏற்பட்டு கோவில் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: கோவையில் பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் அதே பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு புதிய வீடு கட்டிவந்தார்.

அப்போது அவரது இடத்தின் அருகே இறைச்சி கடை வைத்திருந்த ராமசாமி (76), என்பவருக்கும் பழனிச்சாமிக்கும் இடத் தகராறு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டு கட்டுமான வேலைக்காக சென்ற பழனிச்சாமியை ராமசாமி, மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகிய இருவரும் இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர்.

ராமசாமி, ஏசுகுமார் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்து பழனிச்சாமியை வெட்டிக்கொன்ற ராமசாமி, ஏசுகுமார் ஆகிய இருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய குற்றவாளியான ராமசாமி ஏற்கனவே கடந்த 1972 - 1986 வரை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...