கோவையில் பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம்..!

இடத் தகராறு ஏற்பட்டு கோவில் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: கோவையில் பழனிச்சாமி என்பவரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொன்ற தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் அதே பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு புதிய வீடு கட்டிவந்தார்.

அப்போது அவரது இடத்தின் அருகே இறைச்சி கடை வைத்திருந்த ராமசாமி (76), என்பவருக்கும் பழனிச்சாமிக்கும் இடத் தகராறு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வீட்டு கட்டுமான வேலைக்காக சென்ற பழனிச்சாமியை ராமசாமி, மற்றும் அவரது மகன் ஏசுகுமார் ஆகிய இருவரும் இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர்.

ராமசாமி, ஏசுகுமார் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்து பழனிச்சாமியை வெட்டிக்கொன்ற ராமசாமி, ஏசுகுமார் ஆகிய இருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய குற்றவாளியான ராமசாமி ஏற்கனவே கடந்த 1972 - 1986 வரை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...