கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (4.8.2022) காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனம், புதிய ஆயக்கட்டு பாசனம் என மொத்தம் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அணையில் இருந்து கேரளாவுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (4.8.2022) காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.
வினாடிக்கு 3894 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 2636 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் ஆற்றுப்படுகைக்குச் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்று நீரில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட பொதுப்பணித் துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய ஆயக்கட்டு பாசனம், புதிய ஆயக்கட்டு பாசனம் என மொத்தம் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அணையில் இருந்து கேரளாவுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (4.8.2022) காலை 8 மணி நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது.
வினாடிக்கு 3894 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 2636 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் ஆற்றுப்படுகைக்குச் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஆற்று நீரில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட பொதுப்பணித் துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.