'மாடு அறுவை கட்டணம் உயர்வு'-மாநகராட்சியை கண்டித்து கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஒரேயடியாக 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதனால் மாட்டிறைச்சியின் விலை உயரக் கூடும் எனவும், மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.


கோவை: மாடு அறுவை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கோவை மாநகராட்சியை கண்டித்து கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், 5-ரூபாயாக இருந்தஆடு அறுவைக்கு 100 ரூபாயும் 10-ரூபாயாக இருந்த மாடு அறுவைக்கு, 250-ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து, மாநகராட்சி கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக கோவை ஆத்துப்பாலத்தில் அறுவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஒரேயடியாக 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இதனால் மாட்டிறைச்சியின் விலை உயரக் கூடும் எனவும் கூறி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், கட்டணத்தை குறைக்கக்கோரி, ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால்தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்மாட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...