நாடாளுமன்ற மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி எம்பி சண்முக சுந்தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க தனி நபர் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற மக்களவையில் வருகின்ற 12/08/2022 அன்று தனி நபர் தீர்மானம் கொண்டு வர வாக்குசீட்டு முறையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நிலையில் எனது தனி நபர் தீர்மானத்தில்.
அரவை கொப்பரை (கொப்பரை தேங்காய்) மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக இருப்பதாலும், ஏறும் விலைவாசியினை கருத்தில் கொண்டும்.
ஒன்றிய அரசு உடனடியாக அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு ருபாய் 150 ஆக உயர்த்தவேண்டும் என்று தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அரவை கொப்பரை (கொப்பரை தேங்காய்) மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக இருப்பதாலும், ஏறும் விலைவாசியினை கருத்தில் கொண்டும்.
ஒன்றிய அரசு உடனடியாக அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு ருபாய் 150 ஆக உயர்த்தவேண்டும் என்று தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.