கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற விமான நிலைய சுற்று சூழல் குழு கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விமான நிலைய பராமரிப்பு, விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவை: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய சுற்றுச்சூழல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விமான நிலையம், மற்றும் விமான நிலையத்தை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் குறித்தும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுதளத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் புனரமைப்பு மேற்கொள்வது, தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், மாநகர காவல் துணை ஆணையர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விமான நிலையம், மற்றும் விமான நிலையத்தை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் குறித்தும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுதளத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் புனரமைப்பு மேற்கொள்வது, தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், மாநகர காவல் துணை ஆணையர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.