கோவையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

கோவையில் 15-வயது பள்ளிச் சிறுமிக்கு திருமணம் பேச்சு வார்த்தை நடப்பதாக சைல்டு லைன் எண்ணில் வந்த புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி, சம்மந்தப்பட்ட பெற்றோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த 15-வயது பள்ளி சிறுமிக்கு, அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் அறிவுறுத்தலுடன் 1098 சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற குழந்தை நல அலுவலர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையடுத்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரை போலீஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், இப்போது பேசி நிச்சயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால் நிச்சயம் கூட செய்யக்கூடாது, மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் இருந்தால் தயங்காமல் உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...