கோவையில் 15-வயது பள்ளிச் சிறுமிக்கு திருமணம் பேச்சு வார்த்தை நடப்பதாக சைல்டு லைன் எண்ணில் வந்த புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி, சம்மந்தப்பட்ட பெற்றோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையை சேர்ந்த 15-வயது பள்ளி சிறுமிக்கு, அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் அறிவுறுத்தலுடன் 1098 சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற குழந்தை நல அலுவலர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையடுத்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரை போலீஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், இப்போது பேசி நிச்சயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால் நிச்சயம் கூட செய்யக்கூடாது, மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் இருந்தால் தயங்காமல் உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் அறிவுறுத்தலுடன் 1098 சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற குழந்தை நல அலுவலர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையடுத்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரை போலீஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியின் பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், இப்போது பேசி நிச்சயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால் நிச்சயம் கூட செய்யக்கூடாது, மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்த புகார் இருந்தால் தயங்காமல் உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.