கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை பாராட்டி கௌரவித்த மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன்..!

ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து முறையாக இறுதி சடங்கை நடத்தி அடக்கம் செய்த பெண் காவலர் ஆமினாவை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டி கௌரவித்தார்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் ஆமினா, மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து முறையாக இறுதி சடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார்.

இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மாவட்ட காவல் அலுவலகத்திற்குப் பெண் காவலர் ஆமினாவை அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...