வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பழங்குடி பாடகர் கேரள கலால் துறை அதிகாரிகளால் கைது..!

கேரளாவில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் 5 மாதம் ஆன 20-செடிகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த பழங்குடி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (44), இவர் கிராமிய பாடல் பாடகர். இவர் தமிழில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.

இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதை உண்மை என நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து உள்ளார்.

சுமார் 5 மாதம் ஆன 20 செடிகளை பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் 5 மாத செடி என்பதால், பூ வந்து செடியிலிருந்து வாசம் வந்துள்ளது.



இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த கேரள கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



இதையடுத்து அங்கிருந்த 20-செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரை மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...