வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பழங்குடி பாடகர் கேரள கலால் துறை அதிகாரிகளால் கைது..!

கேரளாவில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் 5 மாதம் ஆன 20-செடிகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த பழங்குடி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (44), இவர் கிராமிய பாடல் பாடகர். இவர் தமிழில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.

இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதை உண்மை என நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து உள்ளார்.

சுமார் 5 மாதம் ஆன 20 செடிகளை பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் 5 மாத செடி என்பதால், பூ வந்து செடியிலிருந்து வாசம் வந்துள்ளது.



இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த கேரள கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



இதையடுத்து அங்கிருந்த 20-செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரை மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...