கேரளாவில் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் 5 மாதம் ஆன 20-செடிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த பழங்குடி பாடகரை கேரள கலால் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (44), இவர் கிராமிய பாடல் பாடகர். இவர் தமிழில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை உண்மை என நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து உள்ளார்.
சுமார் 5 மாதம் ஆன 20 செடிகளை பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் 5 மாத செடி என்பதால், பூ வந்து செடியிலிருந்து வாசம் வந்துள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த கேரள கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து அங்கிருந்த 20-செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரை மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (44), இவர் கிராமிய பாடல் பாடகர். இவர் தமிழில் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை உண்மை என நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து உள்ளார்.
சுமார் 5 மாதம் ஆன 20 செடிகளை பையில் வைத்து வளர்த்து வந்துள்ளார். மேலும் 5 மாத செடி என்பதால், பூ வந்து செடியிலிருந்து வாசம் வந்துள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்கு வந்த கேரள கலால் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்த 20-செடிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரை மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.