கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் மகன் பெயர் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோர் மனு..!

கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் மகன் மீது தவறுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மகன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.



கோவை: கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் மகன் மீது தவறுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் மாநகர காவல்ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கனூர் சாலை,கண்ணப்ப நகர்பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவருடன் ஆங்காங்கே கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு சென்றதாக மேலும் 15-பேர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ரத்தினபுரி கனேஷ் நகர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்ற இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அதில் கூறியிருப்பதாவது:- தனது பெயர் செந்தில்குமார் என்றும், பெயிண்டிங் வேலை பார்த்து வருவதாகவும்,தனது மகன் மோசஸும் பெயிண்டிங் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 29 ஆம் தேதி தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்குச் சென்றதாகவும், மீண்டும் கடந்த 31 ஆம் தேதி கோவை வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் 1 ஆம் தேதி மோசஸ் பாலாஜி என்பவருடன் சேர்ந்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம், செல்போன் அழைப்பு மூலமும் தகவல் வந்தது.

ஆனால் தனது மகன் மோசஸ் கஞ்சா போன்ற விற்பனைகளில் ஈடுபடவில்லை என்றும் பாலாஜி என்பருக்கும் தனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஆனால் தவறுதலாக தனது மகன் மீது வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மோசஸ் தலைமறைவாக இல்லை எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மகன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...