கோவை, கரும்புக்கடை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் போத்தனூர் போலீஸில் ஷாருக்கான் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் இருந்த ஷாருக்கான் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் போத்தனூர் போலீஸில் ஷாருக்கான் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் இருந்த ஷாருக்கான் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.