கோவையில் ஆயுத படை காவலர் தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி

கோவை, கரும்புக்கடை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் ஷாருக்கான். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஷாருக்கான் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் போத்தனூர் போலீஸில் ஷாருக்கான் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் வீட்டில் இருந்த ஷாருக்கான் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...