கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை சார்பில் 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் குறித்த தகவல் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பணிமனை நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை போத்தனூர் ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் முரளிகிருஷ்ணா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்களும் பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்கள் சுதந்திர விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கண்காட்சியை பள்ளி குழந்தைகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை சார்பில் 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் குறித்த தகவல் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பணிமனை நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை போத்தனூர் ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் முரளிகிருஷ்ணா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்களும் பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்கள் சுதந்திர விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கண்காட்சியை பள்ளி குழந்தைகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.