கோவை மலுமிச்சம்பட்டி சாலையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரரை போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் லதா மாலை தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல மலுமிச்சம்பட்டி பிரதான சாலையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பேச வருவது போல அருகே வந்து திடிரென லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதையடுத்து லதா செட்டிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் லதா மாலை தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல மலுமிச்சம்பட்டி பிரதான சாலையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பேச வருவது போல அருகே வந்து திடிரென லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டார்.
இதையடுத்து லதா செட்டிபாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.